ஐ.ஜி. மீது பெண் போலீஸ் எஸ்.பி. கொடுத்த புகார் - விளக்கம் கேட்டு தலைமை செயலாளருக்கு கடிதம்

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி மீது பெண் போலீஸ் எஸ்.பி. அளித்த பாலியல் புகார் தொடர்பாக, விளக்கம் கேட்டு, தமிழக தலைமைச் செயலாளருக்கு, பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.ஜி. மீது பெண் போலீஸ் எஸ்.பி. கொடுத்த புகார் - விளக்கம் கேட்டு தலைமை செயலாளருக்கு கடிதம்
x
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. மீது, பெண் போலீஸ் எஸ்.பி. ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதுதொடர்பாக அவர் மீது பல்வேறு  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸாரும் விசாரித்து வருகின்றனர். 
இந்நிலையில், மீ டூ சமூக வலைதளத்தில் அமைச்சர் உள்ளிட்ட பிரபலங்கள் மீது பல்வேறு பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில், பெண் எஸ்.பி. மீதான பாலியல் புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் கேட்டு, பிரதமர் அலுவலகம், தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்