நவராத்திரி பிரம்மோற்சவ விழா : அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி, திருமலை கோயிலில், அனுமந்த வாகனத்தில், மலையப்ப சுவாமி வீதி உலா வருகிறார்.
நவராத்திரி பிரம்மோற்சவ விழா : அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா
x
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு பிறகு, நவராத்திரி பிரம்மோற்சவம், கடந்த 10ஆம் தேதி அங்குரார்ப்பணம் நிகழ்வுடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான இன்று, அனுமந்த வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தார். மாடவீதியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் எழுப்பி மலையப்பரை தரிசனம் செய்தனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கோலாட்டம் ஆடியும் பஜனைகள் பாடியும், மகா விஷ்ணுவின் அவதாரங்களை விளக்கும் வேடம் அணிந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்