கலப்புத்திருமணம் செய்த மகளை கொல்ல முற்பட்ட தந்தை..!

ஹைதராபாத்தில் கலப்புத்திருமணம் செய்து கொண்ட மகளை கொலை செய்ய முயற்சித்த தந்தை போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கலப்புத்திருமணம் செய்த மகளை கொல்ல முற்பட்ட தந்தை..!
x
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், காதல் திருமணம் செய்து கொண்ட மாதவி என்ற பெண்ணையும் அவரது கணவர் சந்தீப்பையும், மாதவியின் தந்தை மனோகர் கொலை செய்ய முயற்சித்தார். பின்னர் போலீசில் சரணடைந்த மனோகர், கொலை முயற்சிக்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். 

வேறு சாதியைச் சேர்ந்த சந்தீப்பை திருமணம் செய்ய வேண்டாம் என தனது மகளிடம் பலமுறை எச்சரித்ததாகவும், ஆனால் தனது எதிர்ப்பையும் மீறி, அவர் திருமணம் செய்து கொண்டதால் அவரைக் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் மனோகர் தெரிவித்துள்ளார். பின்னர் தனது மகளை செல்போனில் தொடர்பு கொண்டு, புதுமண தம்பதிகளுக்கு புத்தாடை வாங்கித்தருவதாக பாசமாக கூறி அவர்களை எர்ரகட்டாவில் உள்ள துணிக்கடை ஒன்றிற்கு வரச் சொல்லியதாகவும் அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த மாதவியும் அவரது காதல் கணவர் சந்தீப்பும், பைக்கில் அந்த துணிக்கடைக்கு வந்ததாகவும் மனோகர் தெரிவித்துள்ளார். 

அப்போது அந்தப் பகுதியில் இருந்த இளநீர்க் கடை ஒன்றில் இருந்து அரிவாளை திருடியதாகவும் அதை வைத்து, தனது மகளையும் மருமகனையும் கடுமையாக தாக்கியதாகவும் மனோகர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்