பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாள் விழா : அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதி உலா

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 6ஆம் நாளான இன்று மலையப்ப சுவாமி அனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்தார்.
பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாள் விழா : அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதி உலா
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. 6 ஆம் நாளான இன்று மலையப்ப சுவாமி ஸ்ரீராமர் அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நான்கு மாடங்களில் வீதி உலா வந்த மலையப்ப சுவாமியை பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். ஆந்திரா, கர்நாடக, கேரள, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், தப்பாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், ஆடியபடியும் சுவாமியின் பல்வேறு அவதாரங்களில் வேடம் அணிந்தும் வீதிஉலாவில் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்