ஈபிஎஸ் உடன் 25 நிமிட திரைமறைவு பேச்சுவார்த்தை? உருவாகிறதா மெகா கூட்டணி?

x

சென்னையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.கவை இணைப்பது தொடர்பாக திரைமறைவு பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படும் நிலையில், பா.ம.க எம்.எல்.ஏக்கள் சதாசிவம், சிவக்குமார், வெங்கடேஸ்வரன் ஆகியோர், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள வீட்டில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியதாகவும், இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்