அதிகாரிகள் முன் கோயிலுக்குள் நுழைந்த 10 குடும்பம்...சொந்த சமூகம் செய்த பகீர் காரியம்

x

திருப்பூரில், மேல்சாதியினரை எதிர்த்து கோயிலுக்குள் நுழைந்த 10 குடும்பத்தினரை, சொந்த சமூகத்தினரே ஒதுக்கி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் பகுதியில் மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும், இந்த கோயிலுக்குள் நுழைய மாற்று சமூகத்தினருக்கு அனுமதி இல்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து, கடந்த 11ஆம் தேதி வருவாய் துறையினர் முன்னிலையில், 10 குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த ஆலயத்திற்குள் நுழைந்து சமத்துவ பொங்கல் வைத்தனர். இந்த 10 குடும்பத்தாரையும், அவர்களது சொந்த சமூகத்தை சேர்ந்த 70 குடும்பத்தினர், தற்போது ஒதுக்கி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விசாரிக்கையில், நாங்கள் மரியாதை நிமித்தமாக அந்த கோயிலுக்குள்ளே செல்ல மாட்டோம்... அந்த 10 குடும்பத்தினர் கோயிலுக்குள் நுழைந்து எங்களை அவமானப்படுத்திவிட்டார்கள் என தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்