ஆப்கானிஸ்தானில் வெடிக்காத குண்டுகளால் 700க்கும் அதிகமான குழந்தைகள் பலி...யுனிசெஃப் அமைப்பு வெளியிடு

x

ஆப்கானிஸ்தானுக்கான யுனிசெஃப் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆப்கானில் போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காத வெடிபொருட்களால் கடந்த ஆண்டில் மட்டும் 700க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. பீரங்கி குண்டுகள், கண்ணிவெடிகள், உள்ளிட்டவை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், அது பற்றிய அறியாத குழந்தைகள் அந்த வெடிபொருட்களை எடுத்து விளையாடிய போது இந்த அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த வாரம் கூட இதுபோன்ற சம்பவத்தில் 8 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்