"பணத்தையும் தரல ... நிலத்தையும் தரல " பா.ம.க கவுன்சிலர் மீது பாய்ந்த வழக்கு...

x

வேப்பிலைப்பட்டியை சேர்ந்த மாதையன் என்பவர், கடந்த 2008-ஆம் ஆண்டு மங்களபுரத்தை சேர்ந்த ரங்கராஜனிடம், நிலத்தை விலைக்கு வாங்கி, முன்பணமாக 2 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். இதை பத்திரத்தில் ரங்கராஜன் எழுதிக்கொடுத்த நிலையில், இருவரும் பதிவு செய்யவில்லை. கடந்த 2013ம் ஆண்டு, அதிக விலைக்கு அந்த நிலம் வேறொருவருக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், மீதி பணத்தை தருவதாகக்கூறி நிலத்தை மாதையன் கேட்டபோது ரங்கராஜன் நிலத்தை எழுதித்தராமல், பணத்தையும் திரும்பத் தரவில்லை. ரங்கராஜனுக்கு ஆதரவாக பா.ம.க மாவட்ட ஊராட்சிகுழு கவுன்சிலர் வடிவேலன், மாதையனை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராசிபுரம் நீதிமன்றத்தில் மாதையன் வழக்கு தொடர்ந்த நிலையில், மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, வடிவேலன், ரங்கராஜன், அவரது மகன் ராம்குமார், ரங்கராஜனின் சித்தப்பா ராமலிங்கம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-


Next Story

மேலும் செய்திகள்