ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே வரும் 18- ம் தேதி விஜய் பிரச்சாரம் நடைபெறும் நிலையில் அருகே உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என கருதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அன்று நடைபெறும் அரையாண்டு தேர்வு அடுத்த நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் பள்ளிநிர்வாகம் கூறியுள்ளது.