பாமக - விசிகவினர் மீது பாய்ந்த வழக்கு - விழுப்புரம் அருகே பரபரப்பு

Update: 2024-04-21 10:43 GMT

விழுப்புரத்தில் வாக்குச்சாவடி அருகே பாமக மற்றும் விசிகவினர் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக 83 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரகண்டநல்லூர் அருகே டி.தேவனூர் கிராமத்தில், வாக்குச்சாவடி அருகே பாமக மற்றும் விசிகவினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக இரு தரப்பும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் பாமகவினர் கொடுத்த புகாரின் பேரில், டி.தேவனூர் கிராம ஊராட்சி தலைவர் உட்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, விசிகவினர் கொடுத்த புகாரின் பேரில், பாமகவை சேர்ந்த 53 பேர் மீது வழக்குப்பதிந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்