ரிப்பன் மாளிகையில் `சிறப்பு செட்டிங்' -கேமரா மூலம் நேரடி கண்காணிப்பு - சென்னை தேர்தல் அதிகாரி அதிரடி

Update: 2024-04-18 11:25 GMT

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறப்போகும் வாக்குப் பதிவை சிசிடிவி கேமரா மூலமாக வெப்ஸ்ட்ரீமிங் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது. இதற்காக சிறப்பு கண்காணிப்பு மையம் ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இரண்டு அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பதற்றமான 685 வாக்குச்சாவடிகள், மிகப் பதற்றமான 23 வாக்குச்சாவடிகள் ஆகியவற்றில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்