சிறையில் இருந்து பிரசாரம்? அனுமதிக்க கோரி மனு

Update: 2024-04-26 01:57 GMT

சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் அமர்ஜீத் குப்தா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது டெல்லி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார். இதனால், ஆம் ஆத்மி கட்சியின் பிரசார தகவல்களை பெறும் அடிப்படை உரிமை பறிபோயுள்ளளதாக தெரிவித்துள்ளார். இதேபோன்று, தேர்தலின்போது பரப்புரை மேற்கொள்ளும் உரிமையும் சிறையிலுள்ள தலைவர்களுக்கும் பறிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளார். இதனால், சிறையில் உள்ள அரசியல்வாதிகள் காணொலி வாயிலாக மக்களவைத் தேர்தலுக்கு பரப்புரை செய்ய அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் கைது செய்யப்படும் தலைவர்கள், வேட்பாளர்களின் விவரத்தை உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பொதுநல மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்