திமுக நிர்வாகி கன்னத்தில் அறைந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியின்போது திமுக நிர்வாகி கன்னத்தில் அக்கட்சி எம்எல்ஏ பளார் என அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜனும், எல்லாபுரம் ஒன்றிய அவைத்தலைவர் முனிவேலும் பேசிக்கொண்டே நடந்தனர். அப்போது முனிவேல் கன்னத்தில் எம்எல்ஏ கோவிந்தராஜன் ஓங்கி அறைந்த நிலையில், இருவரையும் சக நிர்வாகிகள் சமரசப்படுத்தினர்.