மீன் பிடிப்பதில் தகராறு.. சரமாரியாக தாக்கி கொண்ட இரு தரப்பினர்.. IAS ஐஸ்வர்யாவின் அதிரடி உத்தரவு

Update: 2022-12-19 15:41 GMT

பழவேற்காடு அருகே இருதரப்பு மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், 44 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த ஆண்டிக்குப்பம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே மீன் பிடிப்பது தொடர்பாக கடந்த ஓராண்டாக பிரச்சனை இருந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் மீனவர்கள் இரு தரப்பினராக பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 44 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பழவேற்காடு ஏரியில் ஆண்டிக்குப்பம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்து பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்