பள்ளிக்கு சென்ற அக்கா தங்கை மாயம் - தூத்துக்குடியில் பரபரப்பு

Update: 2022-09-02 14:27 GMT

தூத்துக்குடி அருகே, பள்ளிக்கு சென்ற அக்கா-தங்கை இருவரும் காணாமல் போன சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே, ப்ள்ஸ் டூ படிக்கும் மாணவி, தனது 9வது படிக்கும் தனது தங்கையுடன், கடந்த 28ம் தேதி பள்ளிக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் இருவரும் வீடு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவர்களை பல இடங்களில் தேடியுள்ளனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்