"அரசியல் யாரையும் விடாது..." - திமுக எம்.பி. கனிமொழி

Update: 2022-09-23 01:33 GMT

சென்னை தாம்பரத்தில் உள்ள சென்னை கிறித்தவ கல்லூரியில் மகளிர் மாணவ அமைப்பை நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிர் அணி செயலாளர் மு.க.கனிமொழி துவக்கிவைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, உரிமைகள் மற்றும் மாற்றங்கள் என அனைத்திற்கும் அரசியல் தான் காரணம் என்றார். அதனால் மாணவர்கள் மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாக அரசியல் பேசி தெளிவு பெற வேண்டும் என்றார். மாணவர்கள் அரசியல் வேண்டாம் என்றாலும் அரசியல் யாரையும் விடாது என்றும் கனிமொழி கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்