துப்பாக்கியுடன் குழந்தைகளை அழைத்துச் சென்ற பெற்றோர் - பரபரப்பு காட்சிகள்

Update: 2022-09-17 14:11 GMT

கேரளாவில் தெரு நாய்கள் தொல்லையால் மதரஸாவிற்கு துப்பாக்கியுடன் குழந்தைகளை அழைத்துச் சென்ற பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அண்மையில் கேரளாவில் தெரு நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தெரு நாய்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்க, சமீர் என்ற நபர் துப்பாக்கியுடன் சுமார் 13 மாணவர்கள் மதரஸாவுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த காட்சிகளை அவரது மகன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில், சமீர் மீது கேரள போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்