"ஏழுமலையானை தரிசிக்க வரிசையில் இனி காத்திருக்க வேண்டாம்" - குட் நியூஸ் சொன்ன தேவஸ்தானம்

Update: 2022-11-01 12:33 GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கான முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இலவச தரிசனத்திற்காக, பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதற்காக, பக்தர்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருக்காமல் இலவச தரிசனத்திற்கான முன்பதிவு டோக்கன்களை கீழ் திருப்பதியில் உள்ள மூன்று இடங்களில் பெற்றுக் கொள்ள தேவஸ்தான ஏற்பாடு செய்துள்ளது.

இதனால் இலவச டோக்கன்கள் பெற்றுக் கொண்ட பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனத்திற்கு சென்றால் ஒன்று முதல் இரண்டு மணி நேரங்கள் சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்