"எத்தனை தடை வந்தாலும் வீரத்துடன் முறியடிப்போம்" - கமல்ஹாசன் டிவிட்

Update: 2022-12-14 02:05 GMT

ஜல்லிக்கட்டுக்கு எதிராக எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில், ஏறு தழுவுதல் என்பது நமது அடையாளம் எனவும், இயற்கையோடும் கால்நடைகளோடும் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சி எனவும் பதிவிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிப்பதாக கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்