திருமணம் செய்துகொள்ள வலியுறுத்திய இளம்பெண்...சரமாரியாக தாக்கிய காதலன்

Update: 2022-12-26 03:26 GMT

மத்திய பிரதேசத்தில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிய இளம்பெண்ணை, அவரது காதலன் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேவா நகரில், இளம்பெண் ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு, தனது காதலனை கேட்டுள்ளார். உடனே அந்த நபர் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளார். இளம்பெண் அளித்த புகாரின் பேரில், அவரது காதலனை போலீசார் கைது செய்து விடுவித்தனர். இந்த நிலையில் இளம்பெண் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவரது காதலன் மீது, கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்