"பஸ்ஸை கரெக்டா எடுக்கனும்" - ஓட்டுநர், நடத்துநர் கையில் வாட்ச் கட்டி விட்ட அமைச்சர்! | thanthi tv

Update: 2022-12-03 15:36 GMT

புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையைத் துவக்கி வைத்த அமைச்சர் நாசர், ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு கைக்கடிகாரம் பரிசாக வழங்கினார். ஆவடியில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு புதிய வழித்தடத்தில் அரசு விரைவு பேருந்து சேவையை அமைச்சர் நாசர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். அப்போது, அப்பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்கும் வகையில், ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கிய அமைச்சர் நாசர், பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்து மகிழ்ந்தார். இதே போன்று ஆவடி - மிட்டணமல்லிக்கு இடையே, புதிய வழித்தடத்தில் சிற்றுந்தையும், திருமுல்லைவாயில் காலனி- கோயம்பேடு வரையில் புதிய பேருந்து வழித்தடத்தையும் அமைச்சர் நாசர் துவக்கி வைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் டிக்கெட் எடுத்து பேருந்தில் பயணம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்