தமிழக மீனவர்கள் குறித்து திமுக எம்.பி. கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்

Update: 2022-12-20 02:24 GMT

தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்தவில்லை என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நடைபெற்ற சர்வதேச கடற்கொள்ளை எதிர்ப்பு மசோதா மீது மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலுரை வழங்கினார். அப்போது தமிழக மீனவர்களை மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக திமுக எம்.பி.கனிமொழி எழுப்பிய குற்றச்சாட்டிற்கு பதில் அளித்தார். தான் குஜராத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழன் என்றும், தமிழக மீனவர்களை மத்திய அரசு மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் நடத்தவில்லை என கூறினார். கடந்த 2014 -ஆம் ஆண்டில், மத்திய அரசு பொறுப்பேற்றதில் இருந்து இலங்கையில் இருந்து 2 ஆயிரத்து 835 மீனவர்களும் குஜராத்தில் இருந்து 2 ஆயிரத்து 165 மீனவர்களும் விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்