#Breaking|| "எல்லா கதவையும் மூடுங்க".. சபாநாயகர் போட்ட உத்தரவு - பரபரப்பான தமிழக சட்டப்பேரவை

Update: 2023-04-10 07:02 GMT

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அறிவுரை வழங்க மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது தீர்மானத்திற்கு ஆதரவா, இல்லையா என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு பேரவை உறுப்பினர்களிடம் கேட்டார். குரல் வாக்கெடுப்பு முடிந்த பின், எண்ணி கணிக்கும் முறையில் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பு நடைபெறும் போது உறுப்பினர்கள் வெளியே செல்ல கூடாது, அவரவர் இருக்கையில் தான் எழுந்து நிற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிகள் உள்ளன. அதன்படி, பேரவையின் அனைத்து வாசல்களையும் மூடுமாறு அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்