வேலை வாங்கி தருவதாக கூறி 116 நபர்களிடம் மோசடி செய்த பெண்

Update: 2022-10-09 09:55 GMT

கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 52 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்

திருவான்மியூரைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆரோக்கியம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், தான் உட்பட 116 நபர்களிடம் கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, சுமார் 68 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது

நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மோசடியில் ஈடுபட்ட முக்கிய ஏஜெண்டான நடேஸ்வரி என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ஆவணங்கள் மற்றும்

பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்