5 வயது சிறுமிக்கு 65 வயது முதியவர் பாலியல் தொல்லை - போலீசில் சிக்கிய அர்த்தனாரி

Update: 2023-01-13 17:05 GMT

சேலம் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 5 வயது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தது பெற்றோரை அதிர்ச்சியடைய செய்தது. இதையடுத்து, குழந்தையிடம் விசாரிக்கையில், வீட்டின் அருகில் தறி தொழில் செய்து வந்த 65 வயது முதியவர் அர்த்தனாரி என்பவர் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், முதியவர் அர்த்தனாரியை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்