பாலில் மயக்க மருந்து கொடுத்து 11 சவரன் நகை திருட்டு - ஆந்திராவைச் சேர்ந்த தம்பதி துணிகரம்

Update: 2022-10-16 02:30 GMT

பாலில் மயக்க மருந்து கொடுத்து 11 சவரன் நகை திருட்டு - ஆந்திராவைச் சேர்ந்த தம்பதி துணிகரம்

திருவள்ளூர் அடுத்த தாதுக்கான் பேட்டையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்து, 11 சவரன் நகையை தம்பதி திருடிச் சென்றனர். ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த தம்பதி, தாதுக்கான் பேட்டை பாரதியார் தெருவில் உள்ள சுசீலா என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். இந்நிலையில், சுசீலா உள்பட ஐந்து பேருக்கு பாலியல் மயக்கு மருந்து கலந்து கொடுத்த தம்பதி, 11 சவரன் நகையை திருடிச் சென்றதாக தெரிகிறது. இதில், பாதிக்கப்பட்ட சுசீலா, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்