விற்க முயன்ற 10 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல் - 4 பேர் கைது - விசாரணை

Update: 2022-12-12 17:01 GMT

கேரளா மாநிலம் கொல்லத்தில், அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை விற்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொல்லத்தில் உள்ள புனலூர் போலீசார் கரவலூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 10 கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சம் இருந்தது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து காரில் வந்த முஹம்மது அசார், ராய் ஜோசப், ரகு, சைபுதீன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்