நடு வானில் பறக்கும் போது ஆற்றில் விழுந்து எரிந்த விமானம் - ஒருவர் கூட உயிர் பிழைக்காத சோகம்

Update: 2024-04-24 07:34 GMT

எரிபொருள் ஏற்றிச் சென்ற விமானம் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உறைந்த ஆற்றில் விழுந்து விபத்திற்குள்ளானதில் விமானத்தில் இருந்த யாரும் உயிர் பிழைக்கவில்லை... ஃபேர்பேங்க்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட டக்ளஸ் சி 54 ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உறைந்த டனானா ஆற்றில் விழுந்து எரிந்து விபத்திற்குள்ளானது... இதில் விமானத்தில் இருந்த 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அதிகாரிகள் இவ்விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்