இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தல்

இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய சிஐடி போலீசாருக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Update: 2022-05-14 10:51 GMT
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தல் 

இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய சிஐடி போலீசாருக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கொழும்பில் அதிபர் மாளிகைக்கு முன்பாக அமைதியாக நடைப்பெற்ற போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது அத்து மீறி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், எனவே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 7 பேரை கைது செய்யக் கோரி, கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்