ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவானது.

Update: 2021-10-08 09:02 GMT
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கம் சிபா மாகாணத்தில் 80 கிமீ ஆழத்தில் மையம் கொண்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட நிலையில், பெரிதான பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இருப்பினும் சிபா பகுதியில் 4 பேர் நிலநடுக்கத்தால் காயமடைந்தனர். பல இடங்களில் தண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதுடன் மின் தடை ஏற்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்