இந்தியாவின் நிலைமை இதயத்தை உலுக்குகிறது - உலக சுகாதார நிறுவன தலைவர் வேதனை
இந்தியாவில் அதி தீவிரமாக கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், இந்தியாவின் தற்போதைய நிலைமை, இதயத்தை உலுக்கும் வகையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கூறி உள்ளார்.
இந்தியாவில் அதி தீவிரமாக கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், இந்தியாவின் தற்போதைய நிலைமை, இதயத்தை உலுக்கும் வகையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கூறி உள்ளார். சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் உச்சம் தொட்டு வருவதாகவும், இந்தியாவின் நிலைமை, இதயத்தை உலுக்குவதை காட்டிலும் அதிக வேதனை தருவதாகவும் கூறினார். தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் உலக நாடுகளுக்கு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்