இலங்கையின் உரிமை அந்நாட்டு மக்களுக்கே - இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே

இலங்கையின் உரிமை அந்நாட்டு மக்களுக்கே வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

Update: 2021-02-09 06:55 GMT
இலங்கையின் உரிமை அந்நாட்டு  மக்களுக்கே வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இலங்கையின் மொனராகலை சியம்பலான்டுவ பகுதியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பிரதமர் மகிந்த ராஜபக்ச  கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தால் பொருளாதாரம், சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது அவை ஒருசேர முன்னேற்றமடைய செய்துள்ளதாகவும் பேசினார். முந்தைய அரசகாங்கம், யுத்தத்தில் வெற்றி கொண்ட 
இலங்கை ராணுவத்தினரை ஜெனிவாவில் குற்றவாளியாக்கியதாக ராஜபக்சே குற்றம்சாட்டினார். 

எவ்வாறான நெருக்கடி ஏற்பட்டாலும் இலங்கையின் தனித்தன்மையை விட்டு கொடுக்க மாட்டோம் என்று கூறிய அவர், அனைத்து மதத்தின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்