நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-08-12 05:55 GMT
நியூசிலாந்தில் 102  நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நியூசிலாந்து நாட்டுக்கு 20 வயதுடைய நபர் ஒருவர் கடந்த ஜூலை 30 ந்தேதி  வந்துள்ளார்.  அவர் தங்கியிருந்த 3 வது நாளில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஆக்லாந்து நகர் முழுவதும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்ட நபருக்கு கொரோனா மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நியூசிலாந்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1, 570 ஆக உயர்ந்து உள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்