ஆயிரக்கணக்கானோருக்கு உணவு வழங்கும் நபர் - அன்னை தெரசா மீது ஏற்பட்ட ஈர்ப்பால் சேவை

கென்யாவில் அன்னை தெரசாவால் ஈர்க்கப்பட்ட நபர் ஒருவர் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறார்.

Update: 2020-04-17 03:14 GMT
கென்யாவில் அன்னை தெரசாவால் ஈர்க்கப்பட்ட நபர் ஒருவர் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறார். கென்யாவை சேர்ந்த பங்கஜ் ஷாவின் குழுவினர், கொரோனா வைரசால் முடங்கியுள்ள குடும்பத்திற்கு, அரிசி, சர்க்கரை, தேயிலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர். சிறிய கார் விபத்தில் அன்னை தெரசாவை சந்திக்க நேர்ந்ததாக கூறும் பங்கஜ், அதிலிருந்து தமது வாழ்க்கையே மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் கல்கத்தாவில் அன்னை தெரசாவுடன் சேர்ந்து சில நாட்கள் சேவை செய்ததாகவும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்