மணல் புயலால் மூழ்கிய நகரம் - போக்குவரத்து பாதிப்பு , விமானங்கள் ரத்து

ஸ்பெயினில் உள்ள கிரான் கனாரியா தீவு மணல் புயலால் மூடப்பட்டுள்ளது.

Update: 2020-02-23 05:03 GMT
ஸ்பெயினில் உள்ள கிரான் கனாரியா தீவு மணல் புயலால் மூடப்பட்டுள்ளது. சிவப்பு நிறமுள்ள மணல் தூசு, நகரம் முழுவதுமே மூடியதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், நாளை வரை கடும் தூசுக் காற்று வீச வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மக்கள் வீடுகளின் கதவு, ஜன்னல்களை மூடி வைக்க, அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்