அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்கு தடை - போர் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி நடவடிக்கை
இலங்கை ராணுவ தளபதி ஷாவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இலங்கை ராணுவ தளபதி ஷாவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ வெளியிட்டுள்ள பதிவில், இலங்கை உள்நாட்டு போரின் போது, செய்த குற்றங்களுக்காக சில்வாவை அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா, தனது முடிவை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சில்வா மீது எந்த மனித உரிமை மீறல் புகார்களும் நிரூபிக்கப்படவில்லை எனவும் இலங்கை அரசு கூறியுள்ளது.