அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதால் இருநாடுகளிடையேயான மோதல் முற்றியுள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை இலக்கு வைத்து ஈரான் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாக்தாத்தில் உள்ள தூதரகம் அருகே 5 ஏவுகணைகள் வீசி தாக்கப்பட்டதாக கூறப்படுகிது.