இந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 18 பேர் கைது

இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 18 பேரை கைது செய்த கடற்படை 8 படகுகளையும் சிறைப்பிடித்துள்ளது.

Update: 2019-10-04 12:22 GMT
இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 18 பேரை கைது செய்த கடற்படை, 8 படகுகளையும் சிறைப்பிடித்துள்ளது. பிரதமர்  மோடி மற்றும் சீன அதிபர் மகாபலிபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதை முன்னிட்டு கடலோரப் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே  மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 18 மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.  அவர்கள் 18 பேரும் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்