ஐ. நா வளாகத்தில் அமைதிக்கான காந்தி பூங்கா திறப்பு - விழாவில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பு
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி, நியூயார்க் நகரில் உள்ள ஐ. நா வளாகத்தில், அமைதிக்கான சூரிய ஒளி பூங்கா திறக்கப்பட்டது.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150 - வது பிறந்த நாளையொட்டி, நியூயார்க் நகரில் உள்ள ஐ. நா வளாகத்தில், அமைதிக்கான சூரிய ஒளி பூங்கா திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடியுடன் ஐ. நா வின் தலைமை பொதுச்செயலாளர் ANTONIO GUTERRES , சிங்கப்பூர் பிரதமர் LEE HSIEN LOONG, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தென் கொரிய அதிபர் MOON - JAE - IN , நியூசிலாந்து பிரதமர் JACINDA ARDERN ஆகியோரும் கலந்து கொண்டனர். உலக அமைதியை வலியுறுத்தி, தலைவர்கள் ஒளிரும் பந்தில் கை வைத்து, தங்கள்
ஒற்றுமையை பதிவு செய்தனர். மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி, சிறப்பு தபால் தலையும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.