டிவிட்டர் சிஇஓ கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள் - அதிர்ச்சியில் டிவிட்டர் நிறுவனம்

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஜின் டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-08-31 11:12 GMT
டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஜின் டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனவெறியை தூண்டும் வகையில் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்ட நிலையில், அவை அனைத்தும் உடனடியாக நீக்கப்பட்டன. ஜாக் டோர்ஜின் மொபைல் நம்பரை கொண்டு எஸ்எம்எஸ் மூலம் அவரது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சிஇஓவின் டிவிட்டர் கணக்கே ஹேக் செய்யப்பட்டுள்ளதால் டிவிட்டர் பயன்படுத்து வோரிடையே பாதுகாப்பு குறித்து  அச்சம் எழுந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்