அதிபர் தேர்தலில் ராஜபக்சே சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டி...

வரும் இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

Update: 2019-08-11 15:52 GMT
கொழும்பு நகரில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்னாள் அதிபர் ராஜபக்சே கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து எதிர்வரும் அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலரும் தமது சகோதரருமான கோத்தபய ராஜபக்சேவை வேட்பாளராக மகிந்த ராஜபக்சே அறிவித்தார். இந்த அறிவிப்பு இலங்கை அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்