சீனாவில் நிலநடுக்கம் - 6 பேர் பலி : ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள இபின் நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-06-18 03:42 GMT
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள இபின் நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 75 பேர் காயமடைந்தனர். நேற்று இரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்க ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக இந்த நிலநடுக்கம் நீடித்துள்ளது. இதில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 63 தீயணைப்பு வாகனங்களில் சுமார் 302 தீயணைப்பு வீரர்கள், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்