தவறுதலாக வெளியிடப்பட்ட அமெரிக்க எழுத்தாளர் படம் - மறுப்பு தெரிவித்து இலங்கை போலீசார் அறிக்கை
இலங்கை அரசால் வெளியிடப்பட்ட 9 பேர் புகைப்படங்களில் அமாரா மஜீத் என்ற அமெரிக்க எழுத்தாளரின் படம் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசால் வெளியிடப்பட்ட 9 பேர் புகைப்படங்களில் அமாரா மஜீத் என்ற அமெரிக்க எழுத்தாளரின் படம் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட, தேடப்படும் நபர்களில், பாத்திமா காதியா என்ற பெண்ணின் பெயரில் அமாரா மஜீத் என்பவரது படம் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் அறிவித்துள்ளனர்.