"நான் இலங்கை பிரதமராக நீடிக்கிறேன்" - ரனில் விக்கிரமசிங்கே

இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ரனில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை நடத்தினார்.

Update: 2018-10-27 07:01 GMT
இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ரனில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை நடத்தினார். அவரது கட்சி அலுவலகத்தில், ஆதரவாளர்களுடன் இந்த ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து பேட்டியளித்த ரனில், இலங்கைக்கு தானே பிரதமராக நீடிப்பதாகவும், அரசியலமைப்பு சட்டப்படி, அதிபர் சிறிசேனாவால் தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார். தன்னை நீக்கியதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் ரனில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்