நிகரகுவா நாட்டில் அரசுக்கு ஆதரவு எதிர்ப்பு ஊர்வலங்கள்

நிகரகுவா நாட்டில் அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு வேறு பேரணிகள் நடைபெற்றன.

Update: 2018-08-19 13:18 GMT
நிகரகுவா நாட்டில் அதிபர் டேனியல் ஒர்டேகாவின் சர்வாதிகார ஆட்சியில் உள்நாட்டு கலவரத்தால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில்,அரசுக்கு ஆதரவாகவும் நாட்டில் அமைதி திரும்ப வேண்டியும் அதிபரின் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர்.அவர்கள் சிவப்பு வண்ண கொடிகளுடன் சென்றனர். 
இதையடுத்து,அதிபருக்கு எதிராகவும் நிகரகுவா அரசுக்கு எதிராகவும் ஒரு தரப்பினர் பேரணியில் ஈடுபட்டனர்.சுதந்திரம் தேவை என்ற முழக்கத்துடன் சென்ற அவர்கள் நீல வண்ண கொடிகளுடன் பேரணியில் பங்கேற்றனர். மானகுவா நகரில் நடந்த இருவேறு பேரணிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்