லிப்ட் கேட்டு சென்றவருக்கு நடுவழியில் காத்திருந்த அதிர்ச்சி... உடனே சுதாரித்து தரமான சம்பவம்

Update: 2024-04-18 06:59 GMT

#mayiladuthurai | #police

லிப்ட் கேட்டு சென்றவருக்கு நடுவழியில் காத்திருந்த அதிர்ச்சி... உடனே சுதாரித்து தரமான சம்பவம்

மயிலாடுதுறை அருகே தனியார் சிட்பன்ட் ஊழியரை தாக்கி வழிப்பறி செய்த இளைஞரை கிராம மக்கள் மரத்தில் கட்டிவைத்து தாக்கினர். சேந்தங்குடி பகுதியை சேர்ந்த ஜெகன்நாதன் என்பவர், பைக் பஞ்சரானதால், இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். கழுக்கானிமுட்டம் அருகே சென்றபோது, லிப்ட் கொடுத்த இளைஞர் வரதராஜன், தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து ஜெகநாதனை தாக்கி பணத்தை பறித்து தப்பியுள்ளார். பின்னர் நண்பர்கள் உதவியுடன் வரதராஜனை மடக்கி பிடித்த ஜெகநாதன் மரத்தில் கட்டிவைத்து தாக்கி, போலீசில் ஒப்படைத்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்