`சித்திரை திருவிழா கூட்டத்தில் பெண்களிடம் அத்துமீறல்' - அதிரடியில் இறங்கிய போலீஸ்

Update: 2024-04-25 03:42 GMT

மதுரை சித்திரை திருவிழா கூட்டத்தில் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் எச்சரித்து விரட்டியடித்தனர். வண்டியூர் பகுதியில் உள்ள தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது, இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சில இளைஞர்களை போலீசார் கண்காணித்து எச்சரித்தனர். பின்னர் லேசான தடியடி நடத்தி அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்