பைக் மீது மோதிய சரக்கு ஆட்டோ...ஸ்பாட்டிலே பிரிந்த 2 உயிர்கள் - அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-04-24 06:47 GMT

தஞ்சை அருகே, மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.அய்யம்பேட்டை அருகே வேம்பக்குடி கீழத்தெருவை சேர்ந்த ஜெகன் மற்றும் அவரது நண்பரான பாக்யராஜ் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வடக்கு மாங்குடி பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தஞ்சை - விக்ரவாண்டி நெடுஞ்சாலையில் வேம்பக்குடி அருகே சென்றபோது, சமையல் பாத்திரங்கள் ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஜெகன் மற்றும் பாக்யராஜ் இருவரும் தூக்கி வீசப்பட்டதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார், இருவரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்