நள்ளிரவில் பள்ளி மீது மோதிய லாரி - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2024-04-26 10:52 GMT

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி பராமரிப்பு இல்லாத அரசு பள்ளிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. நள்ளிரவில் நடந்த விபத்தால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், பள்ளியின் சுவர்கள் இடிந்து நொறுங்கின. தென்காசியில் சரக்குகளை இறக்கிவைத்துவிட்டு சாத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி, புன்னையாபுரம் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசுக்குச் சொந்தமான பள்ளிக் கூடத்தில் புகுந்தது. மது அருந்தி லாரியை இயக்கி அரசு பள்ளியின் சுவர்களை சேதப்படுத்தியதாக லாரி ஓட்டுநர் சாகுல் ஹமீதை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்