ரவுடி படுகொலை வழக்கு..மர்மகும்பலை மடக்கி பிடித்த போலீசார் தீவிர விசாரணை

Update: 2024-04-27 02:45 GMT

சென்னை, காசிமேட்டில் முன்னாள் ரவுடி படுகொலை செய்யப்பட்ட வழக்கில்... சிறுவர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். காசிமேடு திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் தேசிங்குராஜா. முன்னாள் ரவுடியான இவர், குற்றச்சம்பவங்களில் இருந்து விலகி திருந்தி வாழ்ந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீரென மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். விசாரணையில், கடந்த 2022 ஆம் ஆண்டு தன் மகனை கொலை செய்த கும்பலுக்கும், தேசிங்குராஜவுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட பகையிலே தேசிங்குராஜ் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த கொலையாளிகள் ஐவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்